2076. | ‘பாந்தள், தேர் இவை பழிபடப் பரந்த பேர் அல்குல்! ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயையக் கூந்தல் மென் மயில் குறுகின நெடுஞ் சிறை கோலி, காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ - காணாய்!1 |
பாந்தன்தேர் இவை பழிபடப் பரந்த பேர் அல்குல் - பாம்பின் படமும், தேர்த்தட்டும் என்ற இவை உவமை ஆகாமல் பழிப்பை அடையும்படி அகன்ற பெரிய அல்குலை உடையவளே!; கூந்தல் மென்மயில் - தோகையை உடைய மெல்லிய மயிற்பறவைகள்; குறுகின- அணுகினவாய்; நூல் ஏந்து அணி மார்பினர்ஆகுதிக்கு இயைய - பூணூலைத் தாங்கிய அழகியமார்பினை உடைய அந்தணர்களது வேள்விக்குப் பொருந்த; நெடுஞ்சிறை கோலி -நீண்டதம் சிறகுகளை வளைத்து; காந்து குண்டத்தில் - வெம்மையுள்ள ஓமகுண்டத்தில்; அடங்கு எரி -அடங்கிய நெருப்பை; எழுப்புவ- எரியச் செய்கின்றன; காணாய் - இச்சித்திரகூட மலையில் உள்ள மயில்கள் அந்தணர் ஓமகுண்டத்தில் நெருப்பைத் தம் சிறகால் விசிறி எரியச் செய்து உதவுகின்றன. 31 |