2080. | ‘இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும். கடிய மாசுணம், கற்று அறிந்தவர் என அடங்கிச் சடை கொள் சென்னியர், தாழ்வு இலர் தாம் மிதித்து ஏறப் படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பன - பாராய்! |
இடி கொள் வேழத்தை - இடி போலப் பிளிறுதல் கொண்ட யானையை; எறிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் கடிய மாசுணம் - தந்தத்தோடு ஒருசேரத் தூக்கிவிழுங்கி விடக்கூடிய கொடிய மலைப் பாம்பு; கற்று அறிந்தவர் - நூற்பொருளைக் கற்றுத்தெளிந்தவர்; என - போல; அடங்கி - அடக்கம் உடையதாய் (தம் ஆற்றலைஒடுக்கிக் கொண்டு); சடை கொள் சென்னியர் - சடா முடியை உடைய முனிவர்கள்; தாழ்வு இலர் - சரிதல் இல்லாதவராய்; தாம் மிதித்து ஏற - தாமே மலையின் மேல் மிதித்து ஏறிச் செல்லும்படி; படிகளாம் என - படிக்கற்களைப் போல; தாழ்வரை- மலை அடிவாரங்களில்; கிடப்பன - கிடக்கின்றவற்றைப்; பாராய் -. ஆற்றல் சான்ற மலைப்பாம்புகள் அடங்கி இருத்தலுக்குக் கற்றுணர்ந்தவர் அடக்கம்உவமையாகும். ‘தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சி’ என்ற சிந்தாமணியை இங்குக்(நாமகள் - 53) கருதுக. மலைப் பாம்புகளும் படிகளாகக் கிடந்து முனிவர்கள் தாழாது மலையேற உதவுகின்றன என்றவாறாம். 35 |