2092.மயிலுடைப் பீலியின் விதானம் மேல் வகுத்து,
அயிலுடைச் சுரிகையால் அருகு தூக்கு அறுத்து,
எயில் இளங் கழைகளால் இயற்றி, ஆறு இடு
செயலுடைப் புது மலர் பொற்பச் சிந்தியே.

     மயிலுடைப் பீலியின் மேல் விதானம் வகுத்து - மயிலின் தோகை
கொண்டு மேல்கட்டியைச் செய்தமைத்து; அயில் உடைச் கரிகையால் -
கூர்மை உடைய வாளால்; அருகுதூக்கு அறுத்து - பக்கங்களிலே
தொங்கல் தொங்கவிட்டு; எயில் - மதிலை; இளங்கழைகளால் இயற்றி -
இளைய மூங்கில்களால் செய்தமைத்து; ஆறு இடு செயல் உடைப்புதுமலர்
பொற்பச் சிந்தி -
ஆற்றின் அருகே இருந்து கொணர்ந்த நல்ல புதிய
மலர்களை அழகுறஅங்கங்கே சிதறி.

     மகளிர் இருக்கும் இடம் ஆதலின் மயில் தோகையால் விதானம்
அமைத்தான். பக்கங்களில்மாலைகளைத் தொங்க விடுதல் அழகு நோக்கி.
ஏகாரம் ஈற்றசை.                                              47