இராமன் சாலையில் உவந்திருத்தல் 2094. | மாயம் நீங்கிய, சிந்தனை, மா மறை, தூய பாற்கடல், வைகுந்தம், சொல்லல் ஆம் ஆய சாலை, அரும் பெறல் அன்பினன், நேய நெஞ்சின் விரும்பி, நிரம்பினான். |
மாயம்நீங்கிய சிந்தனை - உலக மாயையிலிருந்து விடுபட்ட ஞானிகளது தெளிந்தமனம்; மா மறை - பெரியவேதம்; தூய பாற்கடல்- (வியூகத்தில் தான்எழுந்தருளி இருப்பதாகிய) தூய்மையான திருப்பாற்கடல்; வைகுந்தம் - (நித்ய சூரிகள் என்றும் வாழ்வுக்கும்இருப்பாகிய)வைகுந்தம்; என்று சொல்லல் ஆம் ஆய - என்று சொல்லுதற்குப்பொருந்தியதாகிய; சாலை - சாலைக்கண்; அரும்பெறல் அன்பினன் - பெறலரும் அன்புடையனாகியஇராமபிரான்; நேய நெஞ்சின்- தனது அன்புள்ளத்தால்; விரும்பி -மகிழ்ச்சி அடைந்து; நிரம்பினான்- நிறைவடைந்தான். இராமன் குடிபுகுந்த காரணத்தால் திருமாலாகிய பரம் பொருள் வீற்றிருக்கும் இடங்களாக அச்சாலை ஆகியது. 49 |