2100.பின்னும், தம்பியை நோக்கி, பெரியவன்,
‘மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு’ இதற்கு
என்ன கேடு உண்டு? இவ் எல்லை இல் இன்பத்தை
உன்னு, மேல் வரும் ஊதியத்தோடு’ என்றான்.

     பெரியவன் - இராமன்; பின்னும் - மறுபடியும்; தம்பியை நோக்கி-
இலக்குவனைப் பார்த்து; ‘மன்னும் செல்வத்திற்கு - (உலகில்) பெறும்
பொருட்செல்வத்திற்கு; வரம்பு உண்டு - இவ் வளவு என்று ஒரு எல்லை
உண்டு; இதற்கு -இந்த வனவாசத் தவம்

ஆகிய செல்வத்துக்கு; என்ன கேடு உண்டு?- என்ன அழிவு உண்டு; இவ்
எல்லை இல்இன்பத்தை மேல் வரும் ஊதியத்தோடு உன்னு’ -
இந்த
அளவுபடாத அழிவுபடாத இன்பவாழ்க்கையைமறுமையில் இத்தவத்தால்
பெறும் நற்கதியாகிய இலாபத்தோடு சேர்த்து நினைப்பாயாக;’  என்றான்-.

     அரசச் செல்வம் அழிவுடையது; அளவு உடையது. ஆனால், தவச்
செல்வமோ அழிவற்றது;அளவற்றது; மறுமைக்கும் பயன் தரவல்லது.
ஆகவே அரச போகத்தைவிட, வனவாசமே எனக்கு மகிழ்ச்சி தருவது
ஆதலின், எனக்குத் துன்பம் விளைந்ததாகவே நான் கருதவில்லை; அதனை
நினைத்து நீதுன்புறுவானேன்’ என்றானாம் - இது ‘இடரினுக்கு அங்குரம்
முந்தி வந்து முளைத்தது அன்றோ’ என்றுஇலக்குவன் கூறிய சொற்களுக்குப்
பதில் போல் அமைந்து ஆறுதல் தருவதாயிற்று.                     55