211.அன்னாள் இன்ன பன்னி
     அழியத் துயரால், மன்னர்
மன்னானவனும் இடரின்
     மயங்கி, ‘மைந்தா! மைந்தா!
முன்னே வனம் ஏகிடல் நீ
     முறையோ? முதல்வா! முறையோ?
என்னே, யான் செய் குறைதான்?’
     என்றே இரங்கி மொழிவான்;

     பன்னி - பலமுறை சொல்லி; மன்னர் மன் ஆனவனும் - தயரதனும்.
                                                          53-1