பரதன் அழகு அழிந்த நகரின் நிலையைப் பார்த்தல்  

2130.மீண்டும் ஏகி, அம் மெய் எனும் நல் அணி
பூண்ட வேந்தன் திரு மகன், புந்திதான்
தூண்டு தேரினம் முந்துறத் தூண்டுவான்,
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான்.

     மெய் எனும்  நல் அணி பூண்ட அவ் வேந்தன் - வாய்மை
என்னப் பெறுகின்ற சிறந்தஅணியை அணிந்துகொண்ட அந்தத்
தயரதனுடைய;  திருமகன் - சிறந்த மகனாகிய பரதன்; மீண்டும் ஏகி -
மேலும் சென்று; புந்திதான் - அறிவானது; தூண்டு தேரினும் -விரைவாகச்
செலுத்தப்படுகின்ற தேரைக் காட்டிலும்;  முந்துற - முற்படடுச் செல்லும்படி;
தூண்டுவான் -அறிவை முற்படச் செலுத்தி ஆராய்பவனாகி; நீண்ட
வாயில்
-நெடிதுயர்ந்த வாயிலை உடைய; நெடுநகர் - சிறந்த அயோத்தி
நகரை; நோக்கினான் -உள்உணர்வோடு பார்த்தான்.

     நாடு பொலிவிழந்த நிலை கண்ட உண்டாகிய துன்பம் அவன் புத்தியை
விரைவாகச்செலுத்தியது.  ஆதலின் விரைந்து  நகர்வாயிலை அடைந்தான்.

     அயோத்தியின் ‘வைஜெயந்தம்’ என்ற பெயருடைய மேற்கு வாயிலைப்
பரதன் அடைந்தான் என்றுவான்மிகம் கூறும்.                      29