கொடைமுரச ஒலி அவிந்த நகர் காணல் 2132. | ‘ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும், வேட்ட, வேட்டவர் கொண்மின், விரைந்து’ எனக், கோட்டி மாக்களைக் கூவுவ போல்வன, கேட்டிலன், முரசின் கிளர் ஓதையே. |
‘ஈட்டிய யாவையும் - தேடித் தொகுத்த எல்லாச் செல்வங்களையும்; நல்புகழ் ஈட்டுக்கு - நல்ல புகழைப்பெறுதற்கு; வேட்ட - தாம் விரும்பியவற்றை; வேட்டவர் - விரும்பியவர்கள்; விரைந்து கொண்மின்’ - விரைவாக வந்து வாங்கிக்கொள்ளுங்கள்; என - என்று; கோட்டி மாக்களை- கூட்டமாக உள்ள மக்களை; கூவுவபோல்வன - கூவி அழைப்பன போல்வனவாகிய; முரசின் கிளர் ஓதை - கொடை முரசின் செருக்கிய ஒலியை; கேட்டிலன்- (பரதன்) கேட்கப் பெற்றிலன். கொடை முரசு ஒலித்தலை இரவலர்களைக் கூவி அழைத்தல் போலும் என்றது தன்மைத்தற்குறிப்பேற்ற அணி. கோட்டி - அவை, மக்கள் கூட்டம் உள்ள இடம். இங்கே மக்கள் திரள்என்பதாயிற்று. “என்னும் குறளில் ‘கோட்டி’ என்பது அவை என்னும் பொருள்படல் அறிக. (குறள் 401). 31 |