பரிசிலர் பரிசில் பெறாதுள்ள நகரின் நிலை காணல் 2133. | கள்ளை, மா, கவர் கண்ணியன் கண்டிலன்- பிள்ளை மாக் களிறும், பிடி ஈட்டமும், வள்ளைமாக்கள், நிதியும், வயிரியர், கொள்டிள மாக்களின் கொண்டனர் ஏகவே, |
மா- வண்டுகள்; கள்ளை கவர் கண்ணியன் - தேனைஉண்கின்ற மலர் மாலையைஅணிந்தவனாகிய பரதன்; வள்ளை மாக்கள்- (அரசனை வாழ்த்திப் பாடும்) மங்கலவள்ளைப் பாடகரும்; வயிரியர் - யாழ் முதலிய இயங்களாற் பாடுகின்றவர்களும்; பிடி ஈட்டமும்-பெண்யானைத் திரளையும்; நிதியும் - செல்வத்தையும்; கொள்ளை மாக்களின்- கொள்ளையடித்துக் கொண்டு போகின்ற திருடர்களைப்போல; கொண்டனர் ஏக-பரிசிலாகப் பெற்றுக் கொண்டு செல்ல; கண்டிலன் -. பிள்ளை, மா களிறும், பிடியும் என்று பிரித்துக் கன்றும், யானையும், பிடியும் எனவும்பொருள் உரைக்கலாம். வயிரியர் - பாணர் - வாத்திய இசைஞர் என்பது பொருள். அளவறியாதுவாரிக்கொண்டு செல்வது திருடர் இயல்பு. அதனை ஈண்டுப் பரிசிலர்க்கு உவமை ஆக்கினார். 32 |