அந்தணர் தானம் பெறாத நிலை கண்டு இரங்குதல் 2134. | காவல் மன்னவன் கான்முளை கண்டிலன் - ஆவும், மாவும், அழி கவுள் வேழமும், மேவு காதல் நிதியின் வெறுக்கையும், பூவின் வானவர் கொண்டனர் போகவே. |
காவல் மன்னவன் - (உலகத்தைக் ) காத்தலைச் செய்கிற தயரத மன்னவனது; கான்முளை - வழித் தோன்றலாகிய பரதன்; பூவின் வானவர் - மண்ணுலகத் தேவர்கள்ஆகிய பூசுரர் எனப் பெறும் வேதியர்; ஆவும் - பசுக்களும்; மாவும் - குதிரைகளும்;கவுள் அழிப் வேழமும் - கன்னத்தில் மதம் பெருகுகின்ற யானையும்; காதல் மேவு -ஆசை பெருகுகின்ற; நிதியின் வெறுக்கையும் - செல்வத்தின் மிகுதியும்; கொண்டனர்போக - தானமாகப் பெற்றுக்கொண்டு செல்ல; கண்டிலன் -. கான்முளை - மகனைக் குறிக்கும் சொல்; தந்தையின் காலில் முளைத்தவன் என்பது பொருள்ஆதலின் வழித்தோன்றல் என உரை கூறப்பட்டது. அழிதல் - பெருகுதல் என்னும் பொருட்டு “அழியும்புனல் அஞ்சன மா நதியே” என்னும் சிந்தாமணியில் அப்பொருளாதல் (சீவக. 1193) காண்க. ‘ஏ’ஈற்றசை. 33 |