இசையில்லாத அயோத்தி நகரம்  

2135.சூழ் அமைந்த சுரும்பும், நரம்பும், தம்
ஏழ் அமைந்த இசை இசையாமையால்,
மாழை உண் கண் மயில் எனும் சாயலார்
கூழை போன்ற, பொருநர் குழாங்களே.

   பொருநர் குழாங்கள் -பாடி ஆடுகின்ற பொருநர் கூட்டங்களில்
உள்ள; சூழ் அமைந்த கரும்பும் - (மணம்உள்ளவிடத்தே)சுற்றுதல்
பொருந்திய வண்டுகளும்; நரம்பும் - நரம்பினால்இசைக்கும்யாழ் முதலிய
கருவிகளும்; ஏழ் அமைந்த - ஏழாகப் பொருந்திய;தம் இசை
இசையாமையால்
- தமக்குரிய இசையை ஒலிக்காமல் வெறுமனே
கிடக்கிறபடியால்; மாழைஉண்கண் மயில் எனும் சாயலார்- இளமைத்
தன்மையாகியஅறியாமையுடைய மையுண்ட பார்வையுடையவரும்  மயிலைப்
போலும் சாயலுடையவரும் ஆயமகளிர்; கூழை -தலைக் கூந்தலை;
போன்ற - போன்றன.

     கூந்தல் கருநிறம்  உடையது.  நரம்பு போலும் தோற்றம் உடையது.
இசை இசைக்காது - இசைஇசையாத கருநிறம் உடைய வண்டுகளும்,
நரம்புடைய யாழும் அது போன்றன என்றார். ஏழ் அமைந்தஇசை,  குரல்,
துத்தம்,  கைக்கிளை,  உழை,  இளி,  விளரி,  தாரம் என்னும் எழுவகைச்
சுரத்தானங்கள்,  ச ரி க ம ப த நி எனலும் ஆம்.  மாழை - இளமை
என்னும் பொருட்டு. அது இளமைத்தன்மையாகிய அறியாமையைக் குறித்தது.
“மாழை மான் மட நோக்கி உன் தோழி” (திவ்வியப்.1418) என்பது  இங்கு
ஒப்பு நோக்கத் தக்கது. ‘ஏ’ ஈற்றசை.                              34