214.‘ “அந் நான்மறையோன் வழியில்,
     அருள் காசிபன் நல் மைந்தன்,
மின் ஆர் புரி நூல் மார்பன்,
     விருந்தேசனன் மெய்ப் புதல்வன்,
நல் நான்மறை நூல் தெரியும்
     நாவான் சலபோசன் எனச்
சொன்னான் முனிவன் தரு
     சுரோசனன் யான்” என்றான்.

     பிரமன் - காசிபன்,  விருத்தேசனன்,  சலபோசன், சுரோசனன் எனக்
குல முறைக்காண்க.                                         76-2