2170. | அஞ்சினர் வானவர்; அவுணர் அச்சத்தால் துஞ்சினர் எனைப் பலர்; சொரி மதத் தொளை எஞ்சின, திசைக் கரி; இரவி மீண்டனன்; வெஞ் சினக் கூற்றும், தன் விழி புதைத்ததே! |
(பரதன் பெருங் கோபம் கண்டு) வானவர் அஞ்சினர் - தேவர்கள் பயந்தார்கள்; எனைப்பலர் அவுணர் அச்சத்தால் துஞ்சினர் - எத்துணையோ பலராய அசுரர்கள் பயத்தால்இறந்தனர்; திசைக் கரி - திக்கு யானைகள்; மதம் சொரிதொளை - மதம்சொரிகின்ற மிகப் பல தொளைகள்; எஞ்சின - தூர்ந்துபோகப் பெற்றன; இரவி -சூரியன்; மீண்டனன் - மறைந்து போனான்; வெஞ்சினக் கூற்றும் - இயல்பிலேயே கொடுஞ்சினம் உடைய யமனும்; தன் விழி புதைத்தது - தன்னுடைய கண்களை (பரதனைக் காணஅஞ்சி) மூடிக் கொண்டான். அமுதுண்ட வானவர் அஞ்சினர்; அமுதுண்ணாத அவுணர் பயத்தால் துஞ்சினர்; அமரர் - மரிக்கும்தன்மை அற்றவர். பரதன் சீற்றத்தை உயர்வு நவிற்சியாக வருணித்தார். ‘ஏ’ஈற்றசை. 69 |