பரதன் இராமனுக்கு அஞ்சித் தாயைக் கொல்லாது விடுதல் 2171. | கொடிய வெங் கோபத்தால் கொதித்த கோளரி, கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்; ‘நெடியவன் முனியும்’ என்று அஞ்சி நின்றனன்; இடிஉரும் அனைய வெம் மொழி இயம்புவான்; |
கொடிய வெங் கோபத்தால்- (பொங்கிப் புறப்பட்ட) மிகக் கொடிய வெகுளியால்; கொதித்த - (மனம்) சூடேறிய;கோளரி - சிங்கமாகிய பரதன்; கடியவள் - கடும்செயல் செய்தவளாகியகைகேயியை; ‘தாய்’ எனக் கருதுகின்றிலன் - (தன்னுடைய) தாய் என்றுநினைக்கவில்லை (ஆயினும் இவளைக் கொன்றால்); நெடியவன் முனியும் - மூத்தோனாகியஇராமன் கோபிப்பான்; என்று அஞ்சி நின்றனன் - என்று கருதிப் பயந்து கொல்லாமல்(தடைப்பட்டு) நின்றான்; இடி உரும் அனைய - பேரிடியை ஒத்த; வெம் மொழி - கொடியசொற்களை; இயம்புவான் - சொல்லத் தொடங்கினான். தன் மகனுக்குப் பழிவரும் செயலைச் செய்தவள் ஆதலின் தாய் அல்லள்; கொடுஞ்செயல்செய்தாள் ஆதலின் கொல்ல வேண்டும். ஆனால், கொன்றாலும் அது இராமனுக்கு உவப்பாகாது என்பதுகருதிக் கொல்லாமல் விட்டான் என்றார். பரதன் தாயாகிய கைகேயியைக் கொல்லநினைத்ததற்கும். கொல்லாமல் விட்டதற்கும் இராமன்மாட்டுக் கொண்ட பக்தியே காரணமாதல் அறிக. இடி உரும்-ஒரு பொருட் பன்மொழி. 2298,2325-ஒப்பிட்டுணர்க. 70 |