2174. | ‘மாளவும் உளன், ஒரு மன்னன் வன் சொலால்; மீளவும் உளன் ஒரு வீரன்; மேய பார் ஆளவும் உளன் ஒரு பரதன்; ஆயினால், கோள் இல அறநெறி! குறை உண்டாகுமோ? |
‘ஒரு மன்னன் - ஓர் அரசன் (தயரதன்); வன் சொலால் - (கைகேயியின்வரம் என்ற) கொடுஞ்சொல்லால்; மாளவும் உளன் - தன் உயிரை விடவும் இருக்கிறான்; ஒரு வீரன் - ஓர் ஆண்மகன் (இராமன்); மீளவும் உளன் - தான் ஆள வேண்டிய அரசைவிட்டுக் காடு) செல்லவும் இருக்கிறான்; மேய பார் - (இவ்வாறு வந்து சேர்ந்த)பூமியை; ஆளவும் - ஆட்சிபுரியவும்; ஒரு பரதன்- பரதன் என்ற ஒருவன்; உளன்- இருக்கிறான்; ஆயினால் - இவ்வாறானால்; அறநெறி கோள் இல - தரும வழிகுற்றம் உடையதன்று; சிறந்ததே; குறை உண்டாகுமோ - ஒரு குறையும் உடையதாகுமா?’ இகழ்ச்சிக் குறிப்பாளகக் கொள்க. நடந்தவற்றைக் கூறி நன்று! நன்று! என்று தன்னைத்தானே நகையாடிக்கொண்டான் பரதன். “கைகேயி! தாயே! அம்மா உன் ஏற்பாடு அறநெறிக்குக் கோளேஇல்லாத ஏற்பாடு; இனி அறநெறிக்குக் குறை உண்டாகுமோ” என்று கேட்டாளாம். 73 |