பரதனின் இரங்கல் உரை 2191. | ‘எந்தை எவ் உலகு உளான்? எம் முன் யாண்டையான்? வந்தது, தமியென், இம் மயக்கம் காணவோ? சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும், அந்தரத்து அமரரும் அழுது சோரவே. |
அந்தரத்து அமரரும் - வானுலகில் உள்ள தேவர்களும்; அமுது சோரவே -(இவன் புலம்பைக் கேட்டும் இவனைக் கண்டும் தம்மாலும் ஆற்றமுடியாமல் தாமும்) அழுது சோரும்படி;‘எந்தை எவ் உலகு உளான்? - என் தந்தையாகிய தயரதன் இப்போது எந்தஉலகத்தில் இருக்கிறான்?; எம்முன் யாண்டையான் - என் தமையனாகிய இராமன் எவ்விடத்தில் இருக்கிறான்?; தமியென் - ஆதரவற்ற தனியனாகிய யான்; வந்தது -அயோத்திக்கு வந்தது; இம் மறுக்கம் காணவோ? - இந்தத் துன்ப நிலையைக்காண்பதற்காகவோ?; சிந்தையின் - (என்) மனத்தில்; உறு துயர் - பொருந்தியதுன்பத்தைத்; தீர்த்திர்- போக்குங்கள்;’ எனும்- என்பான். இறந்தபின் வேறு உலகம் செல்வர் ஆதலான் ‘எந்தை எவ் உலகு உளான்’ என்றான். இராமன்காடு சென்றபடியால் ‘யாண்டையான்’ அதாவது காட்டில் எவ்விடத்தில் உள்ளான் என்றான்.தந்தையோடும் தமையனோடும் இருக்கின்ற பேறு பெறாமையால் தன்னைத் ‘தமியென்’ என்றுகுறிப்பிட்டான். ‘ஆல்’, ‘ஏ’ அசைகள். 90 |