2193.‘கொடியவர் யாவரும் குலங்கள் வேர்அற
நொடிகுவென் யான்; அது நுவல்வது எங்ஙனம்?
கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன்,
முடிகுவென், அருந் துயர் முடிய’ என்னுமால்,

     ‘யான்-; கொடியவர் யாவரும் - (இராமனைக் காடு செல்லச் செய்த)
கொடியவர்கள்எல்லோரும்; குலங்கள் வேர் அற - தம் குலங்களோடு
வேர் அற்றுப் போகும்படி; நொடிகுவென் - அழித்து  விடுவேன்; அது
நுவல்வது எங்ஙனம்?
- அதுபற்றிச் சொல்வது என்னபயன் உடையது;
(செயலின்தான் அறிய வேண்டும்); கடியவள் வயிற்றினில் பிறந்த
கள்வனேன்
- (எல்லோரையும் அழித்துவிட்டு இறுதியில்) கொடிய கைகேயி
வயிற்றில் பிறந்தவஞ்சகனாகிய யானும்; அருந்துயர் முடிய முடிகுவென்’-
என்னுடைய பொறுத்தற்கரிய துன்பம்இல்லையாம்படி இறந்துபடுவேன்;’
என்னும் - என்று சொல்வான்.

     மிகுதியான துன்பத்தால் பேசுகிறான் ஆதலின், ‘கொடியவர்களையும்
அழித்து, நானும்இறந்துபடிவேன்’ என்றான். ‘ஆல்’  ஈற்றசை.          92