2206.‘கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்,
மன்றிடைப் பிறப் பொருள் மறைத்து வவ்வினோன்,
நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன்,
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே.*

     ‘கன்று உயிர் ஓய்ந்து உகப் பால் கறந்து உண்டோன் - (பால்
விடாமையால்)கன்றுக்குட்டி உயிர் இல்லையாய்ப் போக (பசுவினிடத்து)
எல்லாப் பாலையும் (தானே) கறந்து உண்டவன்; மன்றிடைப் பிறர்
பொருள் மறைத்து வவ்வினோன்
- மன்றத்தில் பிறரதுபொருளை (அவர்
அறியாதபடி) மறைத்துக் கைப்பற்றிக் கொண்டவன்; நன்றியை மறந்திடும்
நயம்இல் நாவினோன்
- (ஒருவன்) செய்த நன்றியை மறந்து (அவனைப்
பழித்துரை செய்யும்)இனிமையற்ற நாக்கை உடையவன்; என்று இவர் உறு
நரகு என்னது ஆக
- என்று கூறப்பெறுகின்றஇந்த மூவரும் சென்றடையும்
நரகம் எனக்கும் சொந்தமாகட்டும்.’

     தனக்கும் கன்றக்கும் பயன்படும்படி பசுவினிடத்தில் நிறையப்பாலை
இறைவன் அளித்திருப்பவும் கன்றுக்குச் சிறிதும் பால் விடாமல் தானே
கறந்து அநுபவித்தல்பாதகம் ஆயிற்று. பலர் கூடியுள்ள இடத்தில் பிறர்
பொருளை மறைத்துக் கைப்பற்றல் அறமற்றசெயல். நயமில் நாவினோன்
தனக்கு நன்மை செய்தவர்களைத் தூற்றுகின்றவன். ‘ஏ’ காரம்ஈற்றசை.   105