2216. | ‘பிணிக்கு உறு முடை உடல் பேணி, பேணலார்த் துணிக் குறு வயிர வாள் தடக் கை தூக்கிப் போய், மணிக் குறு நகை இள மங்கைமார்கள் முன், தணிக்குறு பகைஞரைத் தாழ்க, என் தலை. |
‘பேணலார்த் துணி - பகைவர்களைத் துண்டு படுத்துகின்ற; குறுவயிரவாள்- சிறிய வலிமையான வாளை; தடக்கை தூக்கிப்போய்- நீண்ட கைகளில் (வீரபராக்கிரமத்தோடு) தூக்கிச்சென்ற; (பின்மாட்டாமையால்) பிணிக்கு உறு முடை உடல் பேணி - நோய்களுக்கு இடமாக(நின்று சாவதாக) உள்ள நாற்றம் பிடித்த உடலைப் பாதுகாத்து (உயிர் வாழ விரும்பி); மணிகுறு இள நகை மங்கைமார்கள் முன் - முத்துமணி போன்ற இளைய புன் சிரிப்பினையுடைய மகளிர்முன்னால்; தணிக்குறு பகைஞரை - நம்மால் தாழச் செய்யப்பட வேண்டிய பகைவர்களை; என் தலை தாழ்க - என்தலை வணங்குவதாகுக. போரில் இறவாமல்பாதுகாத்தாலும் இந்த உடல் நிலையற்றது; நோயால் இறந்து படக்கூடியதே, அதனைப் பாதுகாத்து மானம் கெட்டு உயிர்வாழ்வதை விட, உயிரைப்போரில்விட்டு வீரனாக இறப்பதே மேல் என்றான். தாழ்க்க. வேண்டியபகைவர் முன் தாழ்தலே கேவலம்; அதுவும் மகளிர் முன் ஆடவன் இவ்வாறு மானக்குறைஅடைதல் மிகக் கேவலமாகும் என்பதாம். 115 |