சத்துருக்கனன் கோசலையை வீழ்ந்து வணங்கலும் வசிட்டன் வருதலும் 2221. | உன்ன நைந்து நைந்து, உருகும் அன்புகூர் அன்னை தாளில் வீழ்ந்து, இளைய அண்ணலும், சொன்ன நீர்மையால் தொழுது மாழ்கினான்; இன்ன வேலைவாய், முனிவன் எய்தினான்.* |
இனைய அண்ணலும் - (பரதன்) தம்பியாகிய சத்துருக்கனனும்; உன்ன நைந்து நைந்து உருகும் அன்புகூர் அன்னைதாளில் - நினைக்க மனம் கரைந்து கரைந்து, அன்பு மிகுந்த தாயாகிய கோசலையின்திருவடிகளில்; வீழ்ந்து - விழுந்து; சொன்ன நீர்மையால் - பரதன் சொல்லியதன்மை போலவே தொழுது அழுது சொல்லி மயங்கினான்; இன்ன வேலைவாய் - இத்தகையசமயத்தின் கண்; முனிவன் - வசிட்ட முனிவன்; எய்தினான் - அந்த இடத்துக்குவந்து சேர்ந்தான். ‘சொன்ன நீர்மையால்’ என்பதனால் பரதன் புலம்பிய போதே இளையவனும் புலம்பினான்என்க. இருவர்க்கும் இராமனைப் பிரிந்த துக்கமும், தந்தையை இழந்த துக்கமும்ஒன்றே. 120 |