பரதன் துயரதத்தால் அழுதல் 2233. | இடிக்கண் வாள் அரா இடைவது ஆம் எனா, படிக்கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான், தடுக்கல் ஆகலாத் துயரம் தன்னுளே துடிக்க, விம்மி நின்று அழுது சொல்லுவான்; |
(பரதன்) வாள் அரா - கொடி பாம்பானது; இடிக்கண் - இடி இடிக்கின்றகாலத்திடத்து; இடைவது ஆம் எனா - அஞ்சி நடுங்கிப் பின்னடைவு அடைதல் போல என்றுசொல்லும்படி; படிக்கண் வீழ்ந்து - மண்ணிடத்து விழுந்து; அகம் துடிக்கும்நெஞ்சினான் - உள்ளே துடிக்கின்ற மனம் உடையனாய்; தடுக்கல் ஆகலாத் துயரம் -பிறரால் நிறுத்த வொண்ணாத துன்பம்; தன்னுளே துடிக்க - தன்னுள்ளேயே தன்னைப்பதைபதைக்கச் செய்ய; விம்மி நின்று அழுது சொல்லுவான் -. இடியொலி கேட்டவழி பாம்பு அஞ்சி உயிர்விடும். அதுபோலப் பரதனும் வசிட்டன்சொற்கேட்ட துணையான் அஞ்சி நடுங்கி மூர்ச்சித்தான் என்க. பரதன் துயரதம் பிறரால்ஆற்றுதற்கரியது. 132 |