6. கங்கைப் படலம் 224. | அன்ன காரணத்து ஐயனும், ஆங்கு அவர் உன்னு பூசனை யாவும் உவந்தபின், மின்னு செஞ் சடை மெய்த் தவர் வேண்டிட, பன்ன சாலையின் பாடு இருந்தான் அரோ. |
பன்ன சாலை - தவத்தோர் தங்கும் குடில்; பர்ண சாலை - பன்ன சாலை ஆயிற்று; இலை, தழைகளால் வேயப்பெற்றது. ‘அரோ’ அசை. 27-1 |