2252. | ‘முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின், மறையவன் வகுத்தன, மண்ணில், வானிடை, நிறை பெருந் தன்மையின் நிற்ப, செல்வன, இறைவரை இல்லன யாவும் காண்கிலம், |
‘முறை தெரிந்து - முறைமையை நன்கு ஆராய்ந்து; ஒருவகை முடிய நோக்குறின் -ஒருபடித்தாக இறுதிவரை பார்த்தால்; மறையவன் வகுத்தன - பிரமனால் படைக்கப்பட்டனவாகிய;மண்ணில் வானிடை - நிலத்திலும், விண்ணிலும்; நிறை பெருந்தன்மையின் - நிறைந்துவிளங்கும் பேரியல்போடு; நிற்ப -நிலைத்து நிற்பன; செல்வன - இயங்குவன (வாகிய பொருள்களில்); இறைவரை இல்லன - தலைவரைப் பெற்றிராத பொருள்கள்; யாவும் எவையும்; காண்கிலம் - காண்கின்றிலோம். (யாம்)’ உலகிற்கு - மன்னர் இன்றியமையாமை மேல் கூறியது. இங்குச் சரம், அசுரம் ஆகிய இயங்கும்,இயங்காப் பொருள்களுக்கும் தலைவர் இன்றியமையாமை உணர்த்தப்பெற்றது. ‘நிற்ப’ என்பன மலை,மரம் முதலியன. ‘செல்வ’ என்பன மக்கள், விலங்கு, பறவை முதலிய உயிர்களாம். அவற்றிடையேகூடஒரு தலைமை என்பது உண்டு என்பது அறியப்படும். 9 |