பரதன் தன் மனக் கருத்தை அரசவைக்கு எடுத்துச் சொல்லுதல் 2257. | ‘மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய், முதல் தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல், சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால், ஈன்றவன் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ? |
‘மூன்று உலகினுக்கும்- மேல், நடு, கீழ் என்னும் மூன்று இடங்களில் உள்ள மூன்று உலகங்களுக்கும்; ஓர் முதல்வன்ஆய் - ஒப்பற்ற முதற்பொருளாகி; முதல் தோன்றினன் இருக்க - (எனக்கு) முன்னே பிறந்தவனாகிய இராமன் இருக்கின்ற போதே; யான் மகுடம் சூடுதல் - யான் அரசனாக அரசுகட்டில் ஏறி மணிமகுடத்தைச் சூடிக்கொள்ளுதல்; சான்றவர் உரைசெய - பெரியோர்கள்தக்கதே என்ற தம் வாயால் எடுத்துரைக்க; தருமம் ஆதலால் - அறம் என்று கருதப்படுகின்றது ஆதலாம்; ஈன்றவள் செய்கையில் - (இதே செயலைச் செய்த) என்னைப் பெற்றதாயாகிய கைகேயியின் செயற்பாட்டில்; இழுக்கு உண்டாகுமோ - தவறு உளதாகுமா?’ ‘மூத்தவன் இருக்கஇளையவனாகிய நான் அரசு புரிவது தருமம் என்று வசிட்டரே கூறினால்கூறினால் என்தாய் கூறியதில் என்ன தவறு? என்கிறான் பரதன். பெரியோர்கள்வார்த்தையும் தர்மவிரோதமாக இருக்கின்றதே என் திறத்தில் என்றுபுலம்பினானாம். ‘ஓ’ காரம் வினாப்பொருட்டு. 14 |