2260.‘நல் நெறி என்னினும், நான் இந் நானில
மன் உயிர்ப் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்;
அன்னவன்தனைக் கொணர்ந்து, அலங்கல் மா முடி
தொல் நெறி முறைமையின் சூட்டிக் காண்டிரால்.

     ‘நான் -; நல் நெறி என்னினும் - (அரசு புரிவது) தரும நெறியே
என்று நீங்கள்சான்றுகளால் நிரூபித்த வழியும்; இந் நானில மன்
உயிர்ப்பொறை
- இப்பூமியில்உயிர்களைப் பாதுகாக்கும் சுமையை; சுமந்து
இருந்து வாழ்கிலேன்
- தூக்கி அரசனாக இருந்துவாழ உடன்
படமாட்டேன்; அன்னவன்தனைக் கொணர்ந்து - அந்த (அரசாட்சிக்குரிய)
இராமனைக் கொண்டு வந்து; அலங்கல் மாமுடி - மலர் மாலையோடு கூடிய
மகுடத்தை; தொல்நெறி முறைமையின் - தொன்று தொட்டு வரும் மரபு
வழிப்படி; சூட்டிக் கண்டிர் -(அவன் தலையில்) அணிவிக்கக் காணுங்கள்.’

     நாவாற்றலால் எதுவும் நியாயமாக்கப்பட்டுவிடும் என்பது கருதி
‘நல்நெறி என்னினும்’என்றான். ‘எது  எப்படி ஆயினும் என் கருத்து
இராமனை அழைத்துக் கொண்டுவந்து அரசன் ஆக்குதலே’என்றானாம்.
அதுவே மரபும் ஆகும் என்பதனை மீண்டும் ‘தொல்நெறி முறைமையின்’
என்றதனால்குறிப்பித்து, யான் சூடுதல் தொல்நெறி முறைமையன்று என்று
வற்புறுத்தினானாம். ‘உயிர்ப்பொறை’ என்றது மன்னர் தம்மனத்து
எப்போதும் தம் மக்களை இருத்தி அவர் நலம் நினைத்துக்காத்தாளுதல்
பற்றியாம். ‘ஆல்’ அசை.                                        17