2278.அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனிக்குடை மீது இலாப் படை
பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே.

     அதிர் கடல் - ஒலிக்கின்ற கடலாற் சூழப்பெற்ற;  வையகம்
அனைத்தும் -
உலகம் முழுவதையும்;  காத்தவன் - (நீதி வழுவாது)
காப்பாற்றிய தயரதசக்கரவர்த்தியின்;  விதிவரு - மரபுவழியில்
பாரம்பரியமாக வருகின்ற;  தனிக்குடை- ஒப்பற்ற வெண்கொற்றக்குடை;
மீது  இலா - மேலே பிடிக்கப்படாது  உள்ள;  படை- அச்சேனை;
பொதி பல கவிகை மீன் - நெருங்கிய பலவாகிய (மற்றை மன்னர்களின்)
வெண்குடைகளாகிய விண்மீன்கள்;  பூத்தது  ஆகிலும் - வானம் எங்கும்
நிரம்பித்தோன்றின ஆயினும்;  கதிர் மதி - ஒளியுடைய சந்திரன்;
நீங்கிய கங்குல் - இல்லாத இரவை;  போன்றது -.

     மன்னர்கள் குடைக்குத் தாரகைகளும், சக்கரவர்த்தியின் வெண்கொற்றக்
குடைக்குச்சந்திரனும் உவமையாம். விண்மீன்கள் பூத்திருப்பினும் சந்திரன்
இல்லாத ஆகாயம்பொலிவழிந்திருத்தல் போல, வெண்குடைகள் பல
நடுவே தோன்றினும், சக்கரவர்த்தியின்வெண்கொற்றக் குடை இல்லாமையால்
சேனை பொலிவழிந்து தோன்றிய தென்க.  விதி - முறைமை.இங்கே மரபு
வழியில் சூரிய குலத்தார்க்கு உரியதாய் வருவது. ‘கவிகை மீன்’
உருவகம். ‘ஏ’காரம்ஈற்றசை.                                     35