228.மற்றவள் இறைஞ்சி ஏக,
     மா மலர்த் தவிசின் நீங்காப்
பொற்றொடி யோடும் ஐயன்
     துயில்தரும் புன்மை நோக்கி,
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி,
     இரு கண் நீர் அருவி சோர,
உற்ற ஓவியம்அது என்ன,
     ஒரு சிலை அதனின் நின்றான்.

     ஒரு சிலை - ஒரு கல். இனி ஒரு வில் எனலும் ஆம் ‘வில்லை
ஊன்றிய கையோடும்நின்றான்’ என வருதலின.்                   22-3