2285. | ‘கோமகன் பிரிதலின், கோலம் நீத்துள தாமரைச் செல்வியும், தவத்தை மேவினாள்’ காமனும், அருந்துயர்க் கடலில் மூழ்கினான் ஆம்’ என, நிகழ்ந்தது - அவ் அளவு இல் சேனையே. |
அவ் அளவு இல் சேனை - அந்த அளவற்ற சேனையானது; கோமகன் பிரிதலின் -அரச குமாரனாகிய இராமன் நாடு விட்டுக் காடு சென்றபடியால்; கோலம் நீத்துள - தன்அலங்காரத்தைத் துறந்துள்ள; தாமரைச் செல்வியும் - இலக்குமியும்; தவத்தைமேவினாள் - (தானும்) தவம் செய்ய விரும்பிச் சென்று விட்டாள்; காமனும் -மன்மதனும்; அருந்துயர்க் கடலில் மூழ்கினான் ஆம் - (இன்பம் நுகர்வார் எவரும் இன்மையின் தன்தொழில் இறந்தது என்று) அரிய துன்பக் கடலில் மூழ்கிவிட்டானாகும்; எனநிகழ்ந்தது - என்று சொல்லுமாறு பொலிவும் மகிழ்ச்சியும் இன்றிச் சென்றது. தொழில் செய்தல் மகிழ்ச்சியாம்; தொழில் செய்யாமல் சும்மா இருத்தல் துன்பமாம்;மன்மதன் தனக்கு வேலையின்மை கருதித் துயர்க்கடலில் மூழ்கினான் ஆம். ‘ஏ’ காரம்ஈற்றசை. 42 |