9. சித்திரகூடப் படலம்

229.‘நெய் கொள் நீர் உண்டு,
     நெருப்பு உண்டு, நீண்டு, மைந் நிறைந்த
வை கொள் வேல் எனக்
     காலனும் மறுகுறும் கண்ணாய்!
மெய்கள் நோகின்ற பிடிகளை
     விரும்பிய வேழம்
கைகள் நோகில தாங்கின
     நிற்பன காணாய்!’

     மெய் நோவுற்ற பெண்யானைகளை ஆண் யானைகள் தம் கை நோவு
கருதாது தாங்கிக்கொண்டுநிற்பனவாம்.                           36-1