2290.‘தார்கள் தாம், கோதைதாம், தாமம்தாம், தகை
ஏர்கள்தாம், கலவை தாம், கமழ்ந்தின்று என்பரால் -
கார்கள்தாம் என மிகக் கடுத்த கைம்மலை
வார் கடாம் அல்லது, அம் மன்னன் சேனையே.

     அம் மன்னன் சேனை - (அந்தப் ) பரதன் ஏவிய சேனையில்;
கார்கள்தாம் என- மேகங்களே என்று சொல்லும்படி;  மிகக் கடுத்த
கைம்மலை
- மிகவும் பொருந்த அமைந்தயானைகள்; வார்கடாம்
அல்லது -
பெருகவிடும் மதசலம் அல்லது; ‘தார்கள் தாம், கோதை தாம்,
தாமம் தாம்,  ஏர்கள் தாம்,  கலவை தாம்
- தார்,  கோதை,  தாமம்,
பல்வசைச் சிறப்பான அழகுப்பொருள்கள், கலவைச் சாந்து (இவற்றின்);
கமழ்ந்தின்று’ -மணம் வீசப் பெறவில்லை; என்பர் - என்று சொல்லுவர்.

     தார் முதலிய அணியாமையின் அவற்றின் மணம் இல்லை என்றார்.
தார்- நெடுக ஆடவர்அணியும் மாலை, கோதை - மகளிர் தலையிற் சூடும்
மாலை, தாமம் - வட்டமாலை என இவை மாலைவிசேடங்கள். ஒரோவழிப்
பொதுப் பெயராகவும் இவை வழங்கும். கடுத்த என்பதை உவமைச்
சொல்லாக்குக - கோபித்த யானை என்பதும் ஒன்று. ‘ஏ’ காரம்ஈற்றசை.  47