2323.‘நின்ற கொடைக் கை என்
     அன்பன் உடுக்க நெடுஞ் சீரை
அன்று கொடுத்தவன் மைந்தர் பலத்தை,
     என் அம்பாலே
கொன்று குவித்த நிணம்கொள் பிணக் குவை
     கொண்டு ஓடி,
துன்று திரைக் கடல்,
     கங்கை மடுத்து இடை தூராதோ?

     அன்று- (முடிசூட்டு விழா நிகழ இருந்த) அந்நாள்; கொடை நின்ற
கை -
(முடிசூட்டுவதற்கு முன்பு செய்யவேண்டிய தானம் முதலியவற்றைச்
செய்து) நின்ற திருக்கரங்களை உடைய;என் அன்பன்-என் அன்பிற்குரிய
இராமன்; நெடுஞ் சீரை உடுக்க - பெரியமரவுரியைஉடுக்குமாறு;
கொடுத்தவள் - (அவனுக்குக்) கொடுத்தவளாகிய கைகேயியின்;  மைந்தர்
பலத்தை -
மகனார் ஆன பரதன் சேனையை;  என்அம்பால் கொன்று
குவித்த -
என்னுடையஅம்பினால் கொன்று குவியல் செய்த; நிணம்கொள்
பிணக்குவை
- கொழுப்பு  மிகுதிகொண்ட பிணங்களின் திரட்சியை;
கங்கை - இந்தக் கங்கா
நதி; கொண்டுஓடி - இழுத்துக் கொண்டு
விரைந்து சென்று; துன்று திரைக்கடல் - நெருங்கியஅலைகளை உடைய
கடலில்;  மடுத்து - அவற்றைச் சேர்த்து;இடை தூராதோ?- அக்கடல்
இடத்தைத் தூர்த்து விடாதோ? (தூர்த்துவிடும்)

     ‘நின்ற கொடைக் கை’ என்பதற்கு என்றும் வள்ளலாக நின்ற எனவும்
பொருள் உரைக்கலாம்.சீரை - மரவுரி.  அதன் பொல்லாங்கு கருதி நெடுஞ்
சீரை என்றான். குகன் தன் ஆற்றாமையால்.‘மைந்தா’ என்றது பரத சத்துருக்
கனர்களையும் ஆம்.  சத்துருக்கனன் கைகேயியின் மகனல்லன்ஆயினும்
பரதன் துணையாதலின் ‘மைந்தர்’ என ஒன்றாக்கிக் குறித்தான் குகன் எனல்
அமையும்என்க. ‘பலம்’ என்றது  சேனையை.                       21