2376. | ‘எடுத்த மா முடி சூடி, நிண்பால் இயைந்து அடுத்த பேர் அரசு ஆண்டிலை; ஐய! நீ முடித்த வார் சடைக் கற்றையை, மூசு தூசு உடுத்து நண்ணுதற்கு உற்றளது யாது?’ என்றான். |
(பின்பு முனிவன்) ‘ஐய! - பரதனே!; நின்பால் இயைந்து அடுத்த பேர்அரசு - உன்னிடம் வந்து தானே சேர்ந்த கோசல ராச்சியத்தை; நீ எடுத்த மாமுடி சூடி- நீ உயர்ந்த திருமுடியைச் சூடிக்கொண்டு; ஆண்டிலை - ஆளாமல்; மூசு தூசு உடுத்து -உடம்பைப் போர்த்து மரவுரியை உடுத்துக்கொண்டு; முடித்து - திரித்துக் கட்டின; வார் சடைக்கற்றையை - நீண்ட சடைத்தொகுதியை உடையவனாய்; நண்ணுதற்கு- வனத்தின்கன் வந்து பொருந்துதற்கு; உற்றுளது யாது?’ - நேர்ந்த காரணம் என்ன?; என்றான் - என்றுகேட்டான். எடுத்து - உயர்த்திய, உனக்கென்று உன் தாயால் எடுத்து வைக்கப்பெற்ற என்றும் ஆம்,மரவுரி உடம்பில் ஒட்டிப் பொருந்தாது ஆதலின் போர்த்தாற்போல் உள்ளது என்னும் பொருளில்‘மூசு’ என்று உரைத்தார். உற்றுளது என்பது இடைவந்து தேர்ந்தது என்னும் பொருளில் வந்துள்ளது. 2 |