2384. | கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார், செம்பொனின் கல ராசி திருத்தினார்; அம்பரத்தின் அரம்பையர், அன்பொடும், உம்பர்கோன் நுகர் இன் அமுது ஊட்டினார். |
கொம்பின்- பூங்கொம்பு போல; நின்று - வளைந்து நின்று; நுடங்குறு- ஒல்கிஅசைகின்ற; கொள்கையார் - பண்புடைய; அம்பரத்தின் அரம்பையர் - வானுலக அரம்பை மாதர்;(மைந்தர்க்கு) செம்பொனின் கல ராசி - செம்பொன்னால் ஆகிய அணிகளை; திருந்தினார் - நன்கு அணிவித்து; அன்பொடும் - பிரியத்தோடும்; உம்பர்கோன் நுகர் இன் அழுது - தேவேந்திரன் உண்ணக் கூடிய இனிய அமுத உணவினை; ஊட்டினார் - உண்பித்தார். கொம்பின் - ‘இன்’ உவம உருபு. கல ராசி - அணிகலன்களின் தொகுதி; பல்வேறு அணிகள்.இந்திரன் உண்ணும் அமுதத்தை இவ்வாடவர்களுக்கு அரம்பையர் ஊட்டினார் ஆம். உரைத்து, ஆட்டி, உடுத்தி, திருத்தி, அழுது ஊட்டினார் என்க. மேல் முடியும். 10 |