239.ஏறினர் இளவலோடு,
     இரங்கு நெஞ்சு கொண்டு
ஊறிய தாயரும்
     உரிய சுற்றமும்;
பேறு உள பெரு நதி
     நீங்கி, பெட்போடும்
கூறு தென் கரையிடைக்
     குழீஇய போதிலே.

     பேறு உள பெருநதி - புண்ணியப் பயன் உடைய கங்கை.     63-1