2395.எழுந்தது துகள்; அதின், எரியும் வெய்யவன்
அழுந்தினன்; அவிப்ப அரும் வெம்பை ஆறினான்;
பொழிந்தன கரி மதம், பொடி வெங் கானகம்
இழிந்தன, வழி நடந்து ஏற ஓணாமையே.

     (சேனைகள் சேறலான்) துகள் - புழுதிப்படலம்;  எழுந்தது - மேல்
கிளம்பியது;  எரியும் வெய்யவன் - தகிக்கும் சூரியன்; அதின்
அழுந்தினன்
-அப்புழுதியில் அழுந்திப் போனான்; அவிப்ப அரும்
வெம்மை ஆறினான்
- பிறிதொன்றால்அணைத்தற்கு முடியாத தனது
வெம்மை நீங்கப் பெற்றான்;  கரி பொழிந்தன மதம் -யானைகள்
பொழிந்தனவாகிய மதநீர்; பொடிவெங்கானகம் வழிநடந்து ஏற ஒணாமை-
புழுதியுடைய கொடிய காட்டுவழியில் நடந்து மேற்சேற முடியாதபடி
(வழுக்கும் சேறு செய்து); இழிந்தன - (எங்கும்) பெருகின.

பாலை நிலத்தின் கொடுமையும் யானைகளின் மிகுதியும் கூறியவாறு. ‘ஏ’
ஈற்றசை.                                                     21