இலக்குவன் போர்க் கோலம் பூண்டு, வீர உரை பகர்தல் 2403. | கட்டினன் கரிகையும் கழலும்; பல் கணைப் புட்டிலும் பொறுத்தனன்; கவசம் பூட்டு அமைத்து இட்டனன்; எடுத்தனன் வரி வில்; ஏந்தலைத் தொட்டு, அடி வணங்கி நின்று, இனைய சொல்லினான். |
சுரிகையும் சுழலும் கட்டினன்- (இடையில்) உடைவாளையும், (காலில்) வீரக்கழலையும் கட்டிக்கொண்டு; பல்கணைப் புட்டிலும் பொறுத்தனன் - பல்வகைஅம்புகளையுடைய தூணியைத் (தோளில்) சுமந்து; கவசம் பூட்டு அமைத்து இட்டனன் -போர்க் கவசத்தை (உடம்பிற்) பூட்டிக்கொண்டு; வரிவில் எடுத்தனன் - கட்டமைந்தவில்லைக் (கையில்) எடுத்துக்கொண்டு; ஏந்தலை அடிதொட்டு வணங்கி நின்று - இராமனைத்திருவடி தொட்டு வணக்கம் செய்து எழுந்து நின்று; இனைய சொல்லினான் - இவ்வார்த்தைகளைச் சொன்னான். போர்க்குச் சன்னத்தனானான் என்றார். ஏந்தல் - இராமன்; உயர்ந்தோன் என்னும்பொருளி்ல் வந்தது. திருவடி தொட்டு வணங்குதல் என்பது ஒரு மரபு. 29 |