2405.‘படர் எலாம் படப் படும் பரும யானையின்
திடர் எலாம் உருட்டின, தேரும் ஈர்த்தன,
குடர் எலாம் திரைத்தன, குருதி ஆறுகள்,
கடர் எலாம் மடுப்பன, பலவும் காண்டியால்.

     ‘படல் எலாம் பட - பல வகைத் துன்பங்களும் அடைந்து; படும் -
இறக்கிற;  பரும யானையின் - அணி அணிந்த யானையினது;  திடர்
எலாம் உருட்டின
- உடல்களாகிய மேடுகளையெல்லாம் உருட்டி;  தேரும்
ஈர்த்தன
- தேர்களைஇழுத்துக்கொண்டு; குடர் எலாம் திரைத்தன -
குடல்களையெல்லாம் அலைத்துத் தள்ளி; குருதி ஆறுகள் -
இரத்த
நதிகள்; பலவும் கடர் எலாம் மடுப்பன - பலவும் கடல் முழுவதும்
பாய்ந்து கலப்பனவற்றை; காண்டி - பார்ப்பாயாக...

     உருட்டி,  ஈர்த்து,  திரைத்துக் குருதி ஆறு கடலில் மடுத்தல் காண்டி
என முடிக்க.  குடல்,குடர் என்றார்போலக் கடல், கடர் என நின்றது
செய்யுட்போலி. ‘ஆல்’ ஈற்றசை.                                  31