2407. | ‘கோடகத் தேர், படு குதிரை தாவிய, ஆடகத் தட்டிடை, அலகை அற்று உகு கேடகத் தடக் கைகள் கவ்வி, கீதத்தின் நாடகம் நடிப்பன - காண்டி; நாத! நீ.’ |
‘நாத! நீ -; தாவிய குதிரை படு கேடகத் தேர் - தாவிச் செல்லும் குதிரைகள்இறந்து போன வளைந்து அழகிதாய தேரினது; ஆடகத் தட்டிடை - பொன்மயமானநடுப்பீடத்தின்கண்; அலகை- பேய்கள்; அற்று உகு கேடகத் தடக் கைகள் கவ்வி -போர்க்களத்துத் துண்டாகி விழுந்த கேடகத்தோடு கூடிய நீண்ட கைகளைத் தம் கையாற் பற்றி (தாளமிட்டுக்கொண்டு); கீதத்தின் - இசை பாடிக்கொண்டு; நாடகம் நடிப்பன -கூத்தாடுவனவற்றை; காண்டி - பார்ப்பாயாக.. பலகை எனப்படும் கேடயத்தோடு அற்று விழுந்த கைகளைப் பேய்கள் தாம் எடுத்துக்கொண்டனகானம் இட்டு ஆடுதல் போலும். கோடகம் என்பது தேர் உறுப்பு எனலும்ஆம். 33 |