2407.‘கோடகத் தேர், படு குதிரை தாவிய,
ஆடகத் தட்டிடை, அலகை அற்று உகு
கேடகத் தடக் கைகள் கவ்வி, கீதத்தின்
நாடகம் நடிப்பன - காண்டி; நாத! நீ.’

     ‘நாத! நீ -; தாவிய குதிரை படு கேடகத் தேர் - தாவிச் செல்லும்
குதிரைகள்இறந்து போன வளைந்து அழகிதாய தேரினது;  ஆடகத்
தட்டிடை
- பொன்மயமானநடுப்பீடத்தின்கண்; அலகை- பேய்கள்; அற்று
உகு கேடகத் தடக் கைகள் கவ்வி -
போர்க்களத்துத் துண்டாகி விழுந்த
கேடகத்தோடு கூடிய நீண்ட கைகளைத் தம் கையாற் பற்றி
(தாளமிட்டுக்கொண்டு); கீதத்தின் - இசை பாடிக்கொண்டு;  நாடகம்
நடிப்பன
-கூத்தாடுவனவற்றை;  காண்டி - பார்ப்பாயாக..

     பலகை எனப்படும் கேடயத்தோடு அற்று விழுந்த கைகளைப் பேய்கள்
தாம் எடுத்துக்கொண்டனகானம் இட்டு ஆடுதல் போலும். கோடகம்
என்பது தேர் உறுப்பு எனலும்ஆம்.                              33