2409. | ‘நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய் சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும், கவந்தமும், “உலகம் நின் கையது ஆயது” என்று உவந்தன குனிப்பன காண்டி, உம்பர்போல். |
‘நிவந்த - உயர்ந்து வழிந்து ஒழுகிய; வான் குருதியின் நீத்தம் - பெரிய இரத்த வெள்ளத்திலே; நீந்தி - நீந்திச் சேறலால்; மெய் சிவந்த- உடம்பு செந்நிறமாகப் பெற்ற; சாதகரொடு - பூத கணங்களோடு; சிறுகண் கூனியும்- (உடம்பிற்கு ஒவ்வாத) சிறிய கண்ணை உடைய பேய்களும்; கவந்தமும் - தலையற்றஉடற்குறையும்; “உலகம் நினகையது ஆயது” என்று - உலகமனைத்தும் இராமனாகிய உன் வசம்ஆய்விட்டது என்று; உம்பர் போல்- தேவர்கள் (மகிழ்தல்) போல; உவந்தன- மகிழ்ந்தனவாய்; குளிப்பன - நடனம் ஆடுவன; காண்டி - பார்ப்பாயாக.... சாதகரொடு ‘கூனியும் கவந்தமும் குளிப்பன’ என முடியும் ‘‘பலவயினானும் எண்ணுத் திணை விரவுப்பெயர், அஃறிணை முடிபின செய்யுளுள்ளே” (தொல். சொல். கிளவி. 51.) என்பவாதலின்‘குனிப்பன’ என அஃறிணையாய் முடிந்தது. தேவர்கள் மகிழ்தல் இயல்பு. பேய்கள் மகிழ்ந்து ஆடுதலாகக் கூறியது தற்குறிப்பேற்றமாம். 35 |