2410. | ‘சூழி வெங் கட கரி, துரக ராசிகள், பாழி வன் புயத்து இகல் வயவர், பட்டு அற, வீழி வெங் குருதியால் அலைந்த வேலைகள் ஏழும் ஒன்றாகி நின்று இரைப்பக் காண்டியால். |
‘சூழி - முகபடாம் அணிந்த; வெங் கடகரி - கொடிய மதம் உடைய யானைகள்; துரக ராசிகள் - குதிரைத் தொகுதிகள்; பாழி - பருத்த; வன்- வலிய; புயத்து - தோளை உடைய; இகல் வயவர் - பகைத்த வீரர்கள்; பட்டு அற - செத்து விழ; வீழி - வீழ்ந்த; வெங்குருதியால் - கொடிய இரத்தப் பெருக்கால்; அலைந்த வேலைகள் ஏழும் - அலை வீசும் ஏழு கடல்களும்; ஒன்றாகி நின்று - ஒரு கடலாகியிருந்து; இரைப்ப- ஒலிசெய்ய; காண்டி -பார்ப்பாயாக...
நால்வகைச் சேனைகளும் அடியோடு அழிதலால் உண்டான குருதியாறு கூடுதலால் ஏழுகடல்களும்ஒன்றாகி இரரைத்தன. வீழி - வீழிப் பழம் போன்று சிவந்த குருதி என்றும் ஆம். அலைந்தஎன்பது வேலைகளுக்கு அடை. இனி, குருதியால் அலைவீசிய வேலைகள் ஏழும் ஒன்றாகின எனினும்அமையும். ‘ஆல்’ ஈற்றசை. 36 |