2414.‘ “வையகம் துறந்து வந்து அடவி வைகுதல்
எய்தியது உனக்கு” என, நின்னை ஈன்றவள்
நைதல் கண்டு உவந்தவள், நவையின் ஓங்கிய
கைகயன் மகள், விழுந்து அரற்றக் காண்டியால்.

     “வையகம் துறந்து - நிலவுலக அரசாட்சியைக் கைவிட்டு;  வந்து -;
அடவி வைகுதல்
- காட்டில் தங்கியிருத்தல்;  உனக்கு எய்தியது” -
உனக்கு வந்து சேர்ந்தது; என- என்று; நின்னை ஈன்றவள் - உன்னைப்
பெற்றவளாய கோசலை; நைதல் கண்டு -வருந்துதலைப்
பார்த்து; 
உவந்தவள் - மகிழ்ச்சி அடைந்தவளாகிய;  நவையின் ஓங்கிய -
(பிறர்க்குத்) துன்பம் செய்வதில் உயர்ந்து  விளங்கும்;  கைகயன் மகள் -
கைகேயி;விழுந்து அரற்ற - (பரதனை இழந்து) தரையில் விழுந்து புலம்ப;
காண்டி -பார்ப்பாயாக...

     கூனியின் போதனை அவ்வாறு ஆதலின் ‘நைதல் கண்டு உவந்தவன்’
என்று  இங்கே கூறினான்.‘ஆல்’ ஈற்றசை.                         40