2417. | ‘நம் குலத்து உதித்தவர், நவையின் நீங்கினர் எங்கு உலப்புறுவர்கள் ? எண்ணின், யாவரே தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர்?- பொங்கு உலத் திரளொடும் பொருத தோளினாய்! |
பொங்கு - வளர்ச்சியடைந்து; திரள் உலத்திரளொடும் - திரண்ட கல்தூணுடனே; பொருத - மாறுபட்ட (அதனினும் சிறந்த); தோளினாய்! - தோளினைஉடையவனே!; நம் குலத்து உதித்தவர் - நம்முடைய சூரிய குலத்தில்தோன்றியவர்களாகிய; நவையுள் நீங்கினர் - குற்றத் திலிருந்து நீங்கிய அரசர்கள்;எங்கு உலப்புறுவர்கள்? - எவ்வாறு அளவிடப்படக்கூடியவர் (அளவிடமுடியாதவர்); எண்ணின் - யோசிக்கும் இடத்து; தம் குலத்து ஒருவ அரும் - தம் குலத்தில்விட்டு விலக முடியாத; தருமம் நீங்கினன் - அறத்திலிருந்து நீங்கியவர்கள்; யாவரே - யார்?...... (ஒருவரும் இல்லை என்றபடி) அளவிடல் என்பது எண்ணிக்கையான் அன்று; அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகை ஆற்றலால்அளவுபடாதவர் என்றவாறாம். பொங்கு உலத்திரள் - பெரியதாகிய கற்றூண் எனலும் ஆம். 43 |