இராமன் தயரதனை நினைத்துப் புலம்புதல் கொச்சகக் கலி 2434. | ‘நந்தா விளக்கு அனைய நாயகனே! நானிலத்தோர் தந்தாய்! தனி அறத்தின் தாயே! தயா நிலையே! எந்தாய்! இகல் வேந்தர் ஏறே! இறந்தனையே! அந்தோ! இனி, வாய்மைக்கு ஆள் உளரே மற்று?’ என்றான். |
‘நந்தா விளக்கு அனைய நாயகனே!’ - அணையாத விளக்கைப் போல (இரவும் பகலும்புகழோடு விளங்கிய) தலைவனே!; நானிலத்தோர்- இம் மண்ணுலகில் உள்ளார்க்கு; தந்தாய்! - தந்தையொப்பவனே!; தனி அறத்தின் - ஒப்பற்ற அறம் என்னும்குழந்தைக்கு; தாயே! - (பெற்று வளர்த்த) தாயே!; தயா நிலையே! - பேரருளுக்குஇருப்பிடம் ஆனவனே!; எந்தாய் - என் தந்தையே!; இகல் வேந்தர் ஏறே! -பகையரசர்களாகிய யானைகளுக்குச் சிங்கம் போன்றவனே!; இறந்தனையே - இறந்து போய் விட்டாயே; இனி வாய்மைக்கு மற்று யார் உளர்? - இனிமேல் சத்தியத்தைக் காப்பதற்குவேறு யார் இருக்கின்றார்கள்; அந்தோ’ - ஐயோ;’ என்றான்-. நந்தா விளக்கு - தூண்டா விளக்கு. பிறர் தூண்ட வேண்டாது எரியும் விளக்குப் போல, தன்னால் தானே புகழுடையனாய் விளங்கியவன் தயரதன். நால் நிலம் - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் - உலகம் இப்பகுதிக்குள் அடங்குதலின் நானிலம் எனவே உலகம் என்றாம். ஏகாரங்கள் இரக்கப் பொருளில் வந்துள்ளன. 60 |