2440. | ‘வண்மைஇயும், மானமும், மேல் வானவர்க்கும் பேர்க்ககிலாத் திண்மைஇயும், செங்கோல் நெறியும், திறம்பாத உண்மைஇயும், எல்லாம் உடனே கொண்டு ஏகினையே!- தன்னைஇ தகை மதிக்கும் ஈந்த தனிக் குடையோய்!’ |
‘தகை மதிக்கும் - பெருமை உடைய முழு நிலவுக்கும்; தண்மை இ- குளிர்ச்சியை; ஈந்த - கொடுத்த (கொடுக்கும்படியான); தனிக் குடையோய்!- ஒப்பற்ற வெண்கொற்றக் குடையை உடைய தயரதனே!; வண்மைஇயும் - கொடைத்திறத்தையும்; மானமும் - மானத்தையும்; மேல் வானவர்க்கும் - மேல் உலகில்உள்ள தேவர்களாலும்; பேர்க்ககிலா - மாற்ற முடியாத; திண்மைஇயும் -வலிமையையும்; செங்கோல் நெறியும் - நேர்மையான அரசாட்சி வழியையும்; திறம்பாதஉண்மைஇயும் - என்றம் எதனாலும் மாறுபடாத சத்தியத்தையும்; எல்லாம் - கூறப்படாதஏனைய நல்லியல்புகளையும்; உடனே கொண்டு - உன்னுடனேயே சேர்த்து எடுத்துக்கொண்டு; ஏகினையே - (இறந்து) சென்றுவிட்டாயே.’ இவை அனைத்தும் இனி இவ்வுலகில் தம்மைத் தாங்குவாரைப் பெற்றில்லையாயின என்பதாகும்.மானம் - தம் நிலையில் தாழாமையும் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம். உயிரளபெடைகள்ஓசை இன்பம் பயக்க வந்தன. அளபெடை இன்றியும் வரும், இவை கொச்சகக் கலி ஆதலின். 66 |