இராமனைப் பலரும் பரிகரித்தலும் முனிவர் நெருங்குதலும்  

2441.என்று எடுத்துப் பற்பலவும்
     பன்னி, இடர் உழக்கும்
குன்று எடுத்த போலும்
     குவவுத் தோள் கோளரியை,
வன் தடக் கைத் தம்பியரும்,
     வந்து அடைந்த மன்னவரும்,
சென்று எடுத்துத் தாங்கினார்;
     மா வதிட்டன் தேற்றினான்.

     என்று எடுத்துப் பற்பலவும் பன்னி - என்று மிகுந்த குரலாற் பல
பலவார்த்தைகளையும் திரும்பத் திரும்பப் பலமுறை சொல்லி;  இடர்
உழக்கும்
-துன்பத்தில் மூழ்கியுள்ள; குன்று எடுத்த போலும் குலவுத்
தோள் கோளரியை
- மலையைத்தூக்கி நிறுத்தினாற் போலும் திரண்ட
தோள்களையுடைய சிங்கம் போன்ற இராமனை; வன்தடக்கைக்
தம்பியரும்
- வலிய பெரிய கைகளை உடைய தம்பிமார் மூவரும்; வந்து
அடைந்தமன்னவரும்
- (அங்கு) வந்து சேர்ந்த அரசர்களும்; சென்று -
நெருங்கி; எடுத்து - தூக்கி அணைத்து; தாங்கினார் - பரிகரித்தார்கள்; மா
வதிட்டன்
- பெருமையுடைய வசிட்ட முனிவன்; தேற்றினான் - தேறுதல்
வார்த்தைகளைக் கூறினான்.

     வசிட்டன் - இந்திரியங்களை வசப்படுத்தியவன், ஞானத்திற் குடி
கொண்டவன், பிரம ஒளி மிக்கவன் என்று பொருள். மன்னர்கள் பின் வந்து
சேர்ந்தனர் என்பதை ‘வந்து அடைந்த மன்னவர்’ என்பதனால் அறியலாம்.67