வசிட்டன் இராமனை நோக்கிக் கூறுதல் 2443. | மற்றும் வரற்பாலர் எல்லாரும் வந்து அடைந்து, சுற்றும் இருந்த அமைதியினில், துன்பு உழக்கும் கொற்றக் குரிசில் முகம் நோக்கி, கோ மலரோன் பெற்ற பெருமைத் தவ முனிவன் பேசுவான். |
மற்றும் - மேலும்; வரற்பாலர் எல்லாரும் - வரவேண்டியவர்கள் எல்லாரும்; வந்து அடைந்து - வந்து சேர்ந்து; சுற்றும் இருந்த அமைதியினில் - இராமனைச் சுற்றி இருந்த பொழுதில்; துன்பு உழக்கும் கொற்றக் குரிசில் முகம் நோக்கி- துன்பத்தில் அழுந்திய வெற்றி நம்பியாகிய இராமனது முகத்தைப் பார்த்து; கோமலரோன் - பெருமையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம தேவன்; பெற்ற - புதல்வன் ஆன; பெருமைத் தவ முனிவன் - பெருமையுடைய தவ முனிவனாகிய வசிட்டம்; பேசுவான் -. பிரமனது நகத்திற் பிறந்தவன் வசிட்டன் என்னும் பாகவதம். ‘வதிட்டன் தேற்றினான்’ என முன்னர்க் (2441.) கூறியது தொகை. இது விரி. இனி விரிவாக வதிட்டன் தேற்றுதலைக் கூறுவார். 69 |