2449.‘புண்ணிய நறு நெயில், பொரு இல் காலம் ஆம்
திண்ணிய திரியினில், விதி என் தீயினில்,
எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால்,
அண்ணலே! அவிவதற்கு, ஐயம் யாவதோ?

     ‘அண்ணலே! - தலைமை பொருந்தியவனே!; புண்ணிய நறுநெய்யில்-
புண்ணியம்என்கின்ற நல்ல நெய்யில்; பொரு இல் - ஒப்பற்ற; காலம்
ஆம் திண்ணியதிரியினில்
- காலமாகிய வலிய திரியில்;  விதி என்
தீயினில்
- விதிஎன்கின்ற நெருப்பினால்; எண்ணிய - கருத்தோடு
ஏற்றப்பெற்ற; விளக்கு -உயிர் வாழ்க்கை என்கிற தீபம்; அவை இரண்டும்
எஞ்சினால்
- (நெய்யும் திரியுமாகிய)புண்ணியமும் விதியும் ஒழிந்தால்;
அவிவதற்கு - அணைந்து போவதற்கு; ஐயம் -சந்தேகம்; யாவதோ? -
ஏனோ? (இல்லை என்றபடி).

     நல்வினையும் விதியும் முடிந்தபொழுது உயிர்வாழ்க்கை
முடிந்துபோகும். காலத் திரி விதி நெருப்பில் கரைந்து எரிந்து போகும்.
புண்ணியம் அனுபவித்து வற்றும். உயிர் உடலைப் பிரியும்; இது இயற்கை
நியதி என்றார்.                                                75