2455.புக்கனன் புனலிடை, முழுகிப் போந்தனன்,
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட, தான்,
முக் கையின் நீர் விதி முறையின் ஈந்தனன் -
ஒக்க நின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான்.

     உயிர்தொரும் - எல்லா உயிர்களிடத்தும்; ஒக்க நின்று - ஒரு
தன்மையாகஉள்ளிருந்து; உணர்வு நல்குவான் - அவற்றிற்கு உணரும்
தன்மையை அருளுபவனாகிய(பரம்பொருள்) இராமன்;  புனலிடை
புக்கனன்
- நதிநீரிற் புகுந்து; முழுகி -நீராடி; போந்தனன் - வெளியேறி;
தக்க நல் மறையவன் - சிறந்த நல்லவேதங்களை உணர்ந்தவனாகிய
வசிட்டன்; சடங்கு காட்ட - செய்ய வேண்டிய சிறந்தகிரியைகளை
வழிப்படுத்த; தான்-; முக்கையின் நீர் - கையினால் மூன்றுமுறை முகந்து
எடுத்துவிடும் தருப்பண நீரை; விதிமுறையின் - நூல்களில் விதித்த
முறைப்படி;  ஈந்தனன் - (தன் தந்தையை நினைத்து) கொடுத்தான்.

     எல்லா உயிர்களுக்கும் உள்ளுறைந்து உணர்வு தரும் பரம்பொருள்,
இராமன் என இப்போது மானுட வேடத்தில் வந்தான் ஆதலின்
அதற்கேற்ப வேதவிதிப்படி சடங்குகள் காட்டத் தருப்பணம் செய்த
தந்தையை வழிபட்டான் என்பதாம்.                               81