2474. | ‘நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும், பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள் துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர் முறையின் நீங்கிய அரசின் முந்துமோ? |
‘நிறையின் நீங்கிய - கற்பு நெறிவிலகிய; மகளிர் நீர்மையும் - பெண்களின் தன்மையும்; பொறையின் நீங்கிய தவமும் - பொறுமையினின்று விலகிய தவவொழுக்கமும்; பொங்கு அருள் துறையின் நீங்கிய - விளங்குகின்ற கருணைவழியிலிருந்து விலகிய; அறமும் - தருமமும்; தொல்லையோர் - முன்னோர்களது;முறையின் நீங்கிய - முறைமையிலிருந்து விலகிய; அரசின் - அரசாட்சியைக்காட்டிலும்; முந்துமோ - (கொடுமையில் முற்படுமோ? (முற்படாது என்றபடி) அரசு முறைமையில் தவறுதல் மற்றவற்றைக் காட்டிலும் பெருங்கேடு பயப்பதென்றான்;பிறவற்றையும் நெறிவழி நிற்கச் செய்வது அரசின் பாற்பட்ட தாதலால். “மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் இல்வழி இன்றாம்”மணி -22 -208- 9,) என்பதை ஈண்டுக்கருதுக.அறத்தின் பயன்அருளே. அருளில்லான் அறம்செய்தல் என்பது நனைப்புக்கிடம் தருவது. “அருளால் அறம் வளரும்” (அறநெறி. 142) என்பதையும் காண்க. 100 |