2476.‘தொகை இல் அன்பினால் இறைவன் துஞ்ச, நீ
புகையும் வெஞ் சுரம் புகுத, புந்தியால்
வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ, யான்
பகைவனேகொலாம்? இறவு பார்க்கிறேன்!

     ‘தொகை இல் அன்பினால் - (உன்னிடத்தில்) எண்ணமுடியாத
அன்பினால் இறைவன்துஞ்ச - தயரதன் இறக்க; நீ புகைஇல் வெஞ்சுரம்
புகுத
- நீ புகையில்லாமல் எரியும்கொடுங்சுரத்தில் சேர்ந்திட; புந்தியால்-
புத்தியினால்; வகை இல் வஞ்சனாய்- வகுத்தற்கு முடியாத வஞ்சனை
உடையனாய்; அரசு வவ்வ - உன் அரசைக்கவாந்துகொள்வதற்கு; யான்
இறவு பார்க்கின்றேன்
- நான் சோர்கின்ற சமயம்பார்த்துக்
காத்திருக்கிறவன் ஆகிறேன்; பகைவனே கொல் - பகைவனேயோ?

     தந்தையும் உரிமை மைந்தனும் இல்லாதபொழுது அரசைக் கைப்பற்றி
தல் பகைவர் செயலேயாம். சோர்ந்த சமயம் பார்த்து இருந்து அரசு
கைப்பற்றுவார் அவரே என்றான். இறவு பார்த்தல் - சோர்ச்சியறிதல்.    102